முஸ்லிம் வாலிபர்களை ஆயுத போராட்டத்திலிருந்து தடுத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

 

 அரசியல் அமைப்பு சட்ட மாற்றம் பாகம் -01 பாகம் ஒன்றில்அரசியல் அமைப்புச் சட்டத்தில் முஸ்லிம்கள் மீது நேரடியாகதாக்கம் செலுத்தக்கூடிய தலைப்புக்கள்தரப்பட்டிருந்தன.இத்தலைப்புக்களை முஸ்லிம்களின்கோணத்தில் இருந்து ஆராய்கின்ற பொழுது மூன்று பிரதானஅம்சங்களை அடையாளம் காணலாம்.

01.ஜனாதிபதி ஆட்சி முறைமையினை ஒழித்து பாராளுமன்றஅட்சி முறையினை கொண்டுவருதல்.

02.தேர்தல் சீர்திருத்தம்

03.அதிகார பரவலாக்கள்.

இம் மூன்று தலைப்புக்களும் விரிவாக ஆராயப்படல்வேண்டும். ஏனெனில் இம்மூன்று தலைப்புக்களும் முஸ்லிம்களின் எதிர்காலத்தினை பதம்பார்க்க கூடியதாகஇருகின்றது. இம்மூன்றுதலைப்புக்களையும் விரிவாகஆராயும் முன் அவை முஸ்லிம் சமூகத்தின் மீது செலுத்தக்கூடிய தாக்கத்தின் வீச்சை சுருக்கமாக பார்த்த பின் மீண்டும்விரிவாக ஆராயலாம்.

அந்தவகையிலே ஜனாதிபதி ஆட்சி முறைபற்றி பார்ப்போமானால்..இந்த நாட்டில் ஜனாதிபதியினைதீர்மானிப்பதிலும் அவரை மாற்றுவதிலும் சிறுபான்மைசமூகங்களின், குறிப்பாக முஸ்லிம்களின் பங்கினை கடந்ததேர்தலில் நடைமுறையில் கண்டோம். ஜனாதிபதி ஆட்சிமுறைமை நீக்கப்படுமாயின் இந்தநாட்டின் ஆட்சியாளரைதெரிவு செய்வதில் நமக்குஇருக்கின்ற பங்கு இல்லாமல்போகின்றது.

gsww_Fotor

 

இரண்டாவதாக தேர்தல்சீர்திருத்தத்தினைபார்க்கின்றபொழுது… புதிய தேர்தல்முறையில் ஒருதனிக்கட்சி சுயமாக 50 வீதத்திற்கு அதிகமானஆசனங்களை பெற்று தனியாக ஆட்சி அமைக்கின்றவிதத்தில் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றது. அதில்அவர்கள் வெற்றி பெற்றால் ஆட்சியை தீர்மானிப்பதில்அல்லது ஆட்சியில் பங்காளர்களாக இருக்கின்றநிலைமையில் இருந்து சிறுபான்மை சமூகங்கள்,குறிப்பாகமுஸ்லிம் சமூகமானது தனது நிலையினைஇழக்கப்போகின்றது. சுருக்கமாக கூறுவதாயின் மத்தியஆட்சியில் எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதுவிதபங்கும்இருக்கப் போவதில்லை.

மூன்றாவதாக அதிகாரப்பகிர்வினைபார்க்குமிடத்து…..இன்று மத்தியில் இருக்கின்றஅதிகாரத்தின் கணிசமான பகுதியினை எடுத்துமாகாணங்களுக்கு வழங்கப்போகின்றார்கள். இதனை மறுவார்த்தையில் கூறுவதாயின் இன்று மத்தியில் இருக்கின்றஅதிகாரமையத்தின் வீரியம் குறைக்கப்பட்டு மேலும் பலமானஒன்பது அதிகார மையங்கள் உருவாக்கப்பட போகின்றன. (இன்று இருக்கின்ற மாகாண சபைகள் வெறும்பெயரளவிலேயே இயங்குகின்றன என்பது கவணத்தில்கொள்க.) அவ்வாறு உருவாக்கப்படுகின்ற ஒன்பது அதிகாரமையங்களுள் கிழக்கினை தவிர  ஏனைய பிரதேசங்களில்வாழுகின்ற முஸ்லிம்கள் அரசியல் பலமுள்ள ஒரு சமூகமாகஇல்லை என்பது தெளிவான விடயமாகும். அவ்வாறான சூழ்நிலையில் அம் மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லிம்களின்நிலைமை கஸ்டமானதாக மாறப்போகின்றது.

சுருக்கமாக கூறுவதாயின் மத்தியிலும், மாகாணக்களிலும்ஒரு செல்லாக்காசான சமூகமாக மாறுவதற்கானவாய்புஇருக்கின்றது. இந்நிலையில் !!.முஸ்லிம்இளைஞனே! தூங்குவதற்கு உனக்கெங்கேநேரமிருக்கின்றது? நாம் செல்ல வேண்டிய பாதை பரந்துவிரிந்து கிடக்கின்றது.!! என்ற அல்லாமா இக்பாலின்கவிதையினை நினைவு கூர்ந்தவர்களாகநாம்விழித்துகொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த ஆபத்தான நிலையில் இருந்து நம்மைகாத்துக்கொள்ள நம்மால் முடிந்த ஜனநாயகவரம்பிற்குட்பட்ட அனைத்தையும் செய்யவேண்டியிருக்கின்றது. ஓவ்வொரு முஸ்லிம் சகோதரனும், சகோதரியும் இது எனது பிரச்சனை என்ற உணர்வைஉள்வாங்கி செயற்பட்டாக வேண்டும். தவறுவோமாயின்நமது எதிர்காலம் மாதிரமல்லாமல் நமது பலதலைமுறைகளின் எதிர்காலமும்கேளிவிக்குறியாக்கப்படலாம். நாம் இரண்டாம் தரபிரஜைகளாக மாற முடியாது. இந்த நாடு நமக்கும் உரியது.இந்தநாட்டின் அரசியல் அமைப்பு மாற்றம் நம்மைபலிக்காடாவாக்க முன்னர் நாம் விழித்துக்கொள்வோம்.ஆகவே இவைகளின் ஆழ, அகலங்களை தெளிவாக புரிந்துகொள்வதற்காக அவற்றை விரிவாக ஆராய்வோம்.

ஜனாதிபதி ஆட்சி முறைமை ஒழிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக காலம் சென்றமதிப்பிற்குறிய சோபித்த தேரரின் தலைமையில் இயங்கியஅமைப்பானது பொது வேட்பாளர் தேடும் முயற்சியில்இறக்கியதன் முக்கிய நோக்கம் ஜனாதிபதி ஆட்சிமுறைமையினை ஒழித்து பாராளுமன்ற ஆட்சிமுறைமையினை கொண்டு வருவதாகும். இதற்கான காரணம்ஜனாதிபதியின் எல்லை கடந்த அதிகாரமானதுசர்வதிகாரத்திற்கு இட்டுச் செல்கின்றது என்பதாகும்.

ஜனாதிபதியின் எல்லை கடந்த அதிகாரத்தினைசீர்திருத்துவதன் மூலம் நியாயமான அதிகாரத்தினைகொண்ட ஒரு ஜனாதிபதி ஆட்சி முறைமையினை கொண்டுவருவதினை மாற்றுத் தீர்வாக முன்வைத்திருக்கலாம். ஆனால் இது தொடர்பாக எவரும் பேசவில்லை. பொதுவேட்பாளர் அடையாளம் காண்பதற்கு நீண்ட நாட்களுக்குமுன்பாகவே இவ்விடயம் தொடர்பாக குறித்த தேரர்தலைமையிலான  அமைப்புடனும் ஐக்கிய தேசியக்கட்சியுடனும் முஸ்லிம் கட்சிகள் பேச வேண்டும் என்றஅடிப்படையில் நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள்கைகூடவில்லை என்பது துரதிஸ்ட்டவசமான விடயமாகும். அதுதொடர்பாக நான் இங்கு விபரிக்க விரும்பவில்லை.இந்தநிலையில் எதிரணியினர் ஜனாதிபதி ஆட்சி ஒழிப்புத்தொடர்பாக தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல்மேடைகளிலும் பகிரங்க வாக்குறுதி வழங்கியநிலையில்அதனை கட்டயம் செய்ய வேண்டிய நிலையில்இன்றையஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.

19வது அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின்அதிகாரங்களில் சில குறைவுகள் செய்யப்பட்டாலும்ஏற்கனவே குறிப்பிட்ட பகிரங்க வாக்குறுதிக்கமையஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும்என்பதில்ஜனாதிபதி உட்பட பல தரப்புக்களிலிருந்தும்முனைப்புக்காட்டப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் முறைமையில் சிறுபான்மையின் பலம்…

ஜனதிபதியின் அதிகாரம் நியாயமானசீர்திருத்தத்திற்குஉட்படுவதில் சிறுபான்மையினருக்குமுரண்பாடு இருக்கமுடியாது. ஆனால் சிறுபான்மையினருக்குஇந்த நாட்டின்ஆட்சியாளர்களை தெரிவு செய்கின்றஉரிமையைவிட்டுக் கொடுக்க முடியாது என்பதே சிறுபான்மைகளின் அடிப்படை நிலைப்பாடாகும். ஜனாதிபதி தேர்தல் முறைமையின் படி ஜனாதிபதியாகவருகின்றவர் 50விகிதத்திற்கு சற்று அதிகமானவாக்குகளைப் பெற வேண்டும். இந்தநாட்டில் சிங்களபெளத்தர்கள் 70 விகிதம் வாழ்கின்றார்கள். (இவர்களில்தேசிய விகிதாசாரத்தில்) 50 விகிதத்திற்குஅதிகமானோர்ஒரு பக்கம் சாய்வது கோட்பாட்டு ரீதியாக சாத்தியமானாலும்நடைமுறை ரீதியாக சாத்தியமில்லை. எனவேசிறுபான்மையினரின் தயவு இல்லாமல் ஒருவர்ஜனாதிபதியாக வர நினைக்க முடியாது.

யுத்த வெற்றியின் அலையினை தவறாக புரிந்து கொண்டமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள்சிங்களபெளத்த மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்றுநிரந்தரமாக ஜனாதிபதியாக இருக்கலாம் எனததப்புக்கணக்கு போட்டார். சிங்களபெளத்தர்கள்பெரும்பான்மையாக அவருக்குதான்வாக்களித்தார்கள்.ஆயினும் சிறுபான்மையினரின் ஆதரவுஇல்லாமல் அவரால் ஜனாதிபதியாக முடியாது என்பதுநிரூபிக்கப்பட்டது.

இதே ஜனாதிபதி ஆட்சி முறை இலங்கைக்கு சுதந்திரம்கிடைத்த பொழுது அறிமுகப்பட்டிருந்தால் பெரும்பாலும்SWRD.பண்டார நாயக்க தனிச்சிங்கள சட்டத்தினைகொண்டு வந்திருக்கமாட்டார். ஏனெனில் தமிழ்பேசும்மக்களின் வாக்குகள் அவருக்கு தேவைப்பட்டிருக்கும்.இந்தநாடும் முப்பது வருட யுத்தத்திற்குள்தள்ளப்பட்டிருக்காது.

தனிச்சிங்கள சட்டத்தினை விடவும் மிக ஆபத்தானஒன்றுதான் 1978ம் ஆண்டு அரசியல் யாப்பில்அறிமுகப்படுத்தப்பட்ட 12 ½ விகிதாசார தேர்தல்வெட்டுபுள்ளியும், 5விகித ஏனைய தேர்தலுக்கானவெட்டுப்புள்ளியுமாகும்.

தேசியக் கட்சிகளில் முஸ்லிம் பிரதி நிதித்துவங்கள் பேசாமடந்தைகளாக இருந்த நிலைமை முஸ்லிம் வாலிபர்களை விரக்த்தியின் விளிம்பிற்குள் தள்ளி 80களின்நடுப்பகுதியில் அவர்களும் ஆயுத இயக்கங்களில் சேர்ந்ததுவரலாறு. இந்திய அமைச்சர்களான சிதம்பரமும்,பண்டாரியும் இலங்கையில் முஸ்லிம்கள் என்ற ஒருதனித்துவ சமூகம்இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.முஸ்லிம்களும் தமிழர்களே. தமிழர்களுக்குள் கோவிலுக்குசெல்கின்ற, தேவாலையத்திற்கு செல்கின்ற,பள்ளிவாயலுக்கு செல்கின்ற தமிழர்கள் இருகின்றார்கள்.மொத்தத்தில் உங்கள் வணக்கஸ்தளங்கள் வித்தியாசமேதவிர  நீங்களெல்லாம் தமிழர்களே என்று நமதுதனித்துவத்தினை அன்று இந்திய அரசு ஏற்க மறுத்தபொழுது அதனை வாய் மூடி மெளனியாக கேட்டுக்கொண்டுதிரும்பி வந்த முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் இருந்த ஒருகாலத்தில்தான் எமது வாய்களுக்கு போடப்பட்ட பூட்டுக்கள்உடைதெறியப்படவேண்டும் என்றும் எமது கைகளுக்கும்கால்களுக்கும் போடப்பட்ட அடிமைச் சங்கிலிதகர்த்தெறியப்பட வேண்டும் என்ற கோசத்துடன் நமதுதனித்துவ பயணம் அன்று ஆரம்பித்தது.

அதனால் தான் மறைந்த தலைவர் மர்ஹூம்எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்கள் “முஸ்லிம் வாலிபர்கள் ஆயுதபோராட்டத்தின் பக்கம் ஈர்க்கப்படாமல் தடுத்தது சிறீலங்காமுஸ்லிம் காங்கிரசின் வருகை “என அடிக்கடி கூறினார்.இவ்வாறு ஒரு தனிக்கட்சி உருவாகி இருந்தாலும் அன்்றைய 12 ½ விகித வெட்டுப்புள்ளி 5விகிதமாக குறைக்கப்படாமல்இருந்திருந்தால் அம்பாறை மாவட்டத்திற்கு வெளியேதனித்துவ அரசியல் ஒருபோதும் சாத்தியப்பட்டிருக்காது. அதுபோலவே இன்று தேசிய தலைவர் பதவிக்குசிலர்ஆசைப்படுவதற்கு சந்தர்ப்பமே இருந்திருக்காது.

ஜனாதிபதி தேர்தல் முறைமை என்று ஒன்று இல்லாமல்இருந்திருந்தால் 1989ம் ஆண்டு இதுசாத்தியப்பட்டிருக்காது. மறைந்த ஜனாதிபதி பிரேமதாசமுஸ்லிம் வாக்குகளைப் பெறுவதற்காகவே மறைந்ததலைவருடைய கோறிக்கையினை ஏற்று 12 ½ விகிதத்தினை5 விகிதமாக்கினார். இதைத்தான் பேரம் பேசும்சக்தி என்கின்றோம். துரதிஸ்ட்டவசாமக பேரம் சக்திக்குவேறு அர்த்தம் தலைவரின் மறைவிற்கு பின்உள்வாங்கப்பட்டது வேறு விடயமாகும்.

இந்த பின்னணியில்தான் ஜனாதிபதி எனும் பதவிஇருக்கும்வரை ஜனாதிபதியானவர் சிறுபான்மைகளைஅரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில்இருக்கின்றார். குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸ்சகற்றுக்கொண்ட பாடத்தின் பின்னணியில் எதிர்காலத்தில்

இன்னும் கவனமாக இருப்பார்கள். இந்நிலையில்இச்சந்தர்ப்பம் புதிய அரசியல் யாப்பினூடாகஇல்லாமலாக்கப்பட போகின்றது. ஆகவே இதை தடுத்துநிறுத்த நாங்கள் செய்ய போவது என்ன?

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஒப்பந்தத்தினூடாக இதற்குஒருதீர்வு காண்பதற்கு முஸ்லிம் கட்சிகளுக்கு ஒரு சந்தர்ப்பம்இருந்தது. மறு வார்த்தையில் கூறுவதாயின்பேரம்பேசக்கூடிய சூழ் நிலை இருந்தது. ஏதோபேசினார்கள், தனக்காக பேரம் பேசினார்கள்.சமூகத்திற்காக பேரம் பேச தவறிவிட்டார்கள்.அதனால்தான்நாங்கள் இன்று அங்கலாய்க்கின்றோம்.

பரவாயில்லை. இப்பொழுதாவது நம்மால் முடிந்ததைசெய்வோம். பஸ் போன பின் கை காட்ட வேண்டாம்..

3ம் பாகம் தொடரும்..

குறிப்பு-முதலாம் பாகத்தினை வாசிக்க விரும்புவர்கள்கீழுள்ள வலைத்தளங்களின் லிங்கினை கிளிக் செய்வதன்மூலம் பார்வை இடலாம்.

லங்காஃபுறன் நியூஸ்:- www.lankafrontnews.com/?p=24152