பாடசாலை சமூகத்தில் முன்மாதிரியான மாணவத் தலைவர்கள்; எதை விதைக்கின்றார்களோ அதையே அறுவடை செய்வர்: அப்துல் றஸாக்

 

11-PMMA CADER-09-02-2016_Fotor

பி.எம்.எம்.ஏ.காதர்

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நான் கற்கின்ற போதுதான் நல்ல பண்புகளையும்,நல்ல ஒழுக்கத்தையும்.பணிவுகளையும் கற்றுக்கொண்டேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.எ.றஸாக் தெரிவித்தர்.

மருதமுனை அல்மனார் மத்திய கல்லுரி மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா திங்கட்கிழமை(08-02-2016)அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றி போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

17-PMMA CADER-09-02-2016_Fotor

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,விஷேட அதிதியாக கலாநிதி சத்தர் எம் பிர்தௌஸ் ஆகியோரும்; பிரதி அதிபர் ஏ.எம்.அன்சார்,பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் எம்.ஐ.எம்.முகர்ரப்,எம்.ஐ.எம்.வலித்,சறோ தாஜூதீன்,வங்கி உத்தியோகத்தர் ஆசிப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.எ.றஸாக்கின் இணைப்பாளர் எம்.எ.சக்கீ, உதவி அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் ஒழுக்காற்றுக் குழுத்தலைவர் எம்.எம்.உவைஸ் ஆசிரியர் நிகழ்வை நெறிப்படுத்தினார்.

இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது :-

கல்முனையில் சிறந்த பாடசாலையாக ஸாஹிரா கல்லூரி இருந்த போதிலும் நான் கல்முனை உவெஸ்லி உயர்தர தமிழ் பாடசாலையில்தான் கல்வி கற்றேன் அங்கு மாணவத்தலைவராகவும் இருந்திருக்கின்றேன்..

மாணவத் தலைவர்கள்தான் பாடசாலை சமூகத்தில்;; முன்மாதிரியானவர்கள்; அவர்கள் எதை விதைக்கின்றார்களோ அதைத்தான் அறுவடை செய்வார்கள் மாணவப்பருவத்தைத் தாண்டி திருமணம் முடித்து குடும்ப வாழ்வில் நுளைந்தபின் நீங்கள் மரணிக்கும் வரை நீங்கள் விதைத்ததை அறுவடை செய்ய வேண்டியிருக்கும் இதில் யாரும் விதிவிலக்கல்ல என்பதை யாரும் மறந்து விட முடியாது.
மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அரசியலில்; எனக்கு குருவானவர் அவர் பாடசாலைக் காலங்களில் பண்பினால் உயர்ந்த ஒருவராகத் திகழ்ந்தார்; அப்போது அவர் கண்டெடுத்த கைக்கடிகாரம் ஒன்றை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தார் அந்த அளவுக்கு பக்குவப்பட்ட நல்ல சிந்தனையிலும், ஒழுக்கதிலும் வளர்க்கப்ட்டவர்;.

மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களை எதனாலும் விலைகொடுத்து வாங்கிவிட,அடைந்து விட முடியாது ஆனால் நல்ல பண்பினால்,பணிவினால் அவரை வென்று விட முடியும் அப்படி நல்ல பண்பினால் வெல்லப்பட்ட ஒருவர்தான் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கின்ற றஊப் ஹக்கீம் அவர்கள்.

ஒரு மாணவன் தன்னை மாணவனாகக் காட்டிக் கொள்ளவே ஆசைப்படுகின்றான் அதற்கு வழிவிட வேண்டும் மாணவர்களிடம் தைரியமும்,துணிவும் இருக்க வேண்டும் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தக் கொள்ள வேண்டும் ஆகவே மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களையும,;நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொண்டு நல்ல விடயங்களை விதைத்து எதிர்காலத்தில் நல்லவற்றை அறுவடை செய்ய முன்வர வேண்டும் என்றார்.

ஆசிரியர்களான நௌபல்,நஸார் ஆகியோர் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்கள்.