பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்க அனுமதிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை !

Dinesh udya vimal vasu_CI

 

பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்க அனுமதிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இந்தக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்குவதற்கு தமக்கு அனுமதியளிக்குமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் கோரியதாக அதன் பேச்சாளர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் புதிய கட்சியில் இணைந்துகொள்வது குறித்து தீர்மானிக்காத போதிலும், தொடர்ந்தும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கப் போவதாக குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சியொன்றை அமைக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.