யோசிதவிற்கு, உணவு எடுத்துச் சென்ற ஷிராந்தி ராஜபக்ஸ !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசிதவிற்கு, அவரது தயாரான ஷிராந்தி ராஜபக்ஸ உணவு எடுத்துச் சென்றுள்ளார்.

1 Pix
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசிதவிற்கு, ஷிராந்தி உணவு எடுத்துச் சென்றுள்ளார்.சிறையில் வழங்கப்படும் உணவை உண்ண முடியாது என யோசித தெரிவித்ததனைத் தொடர்ந்து இவ்வாறு வீட்டிலிருந்து உணவு கொண்டு செல்லப்படுகின்றது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் யோசித உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யோசித, மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.