லலித் கொத்தலாவலவின் மனைவி விமான நிலையத்தில் கைது !

lalith kotalawela wife
செலிங்கோ கூட்டு நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோல்டன் கீ நிறுவனம் நஷ்டமடைந்த போது, அந்த நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்கள் அதனை கோரிய நிலையில், சிசிலியா இலங்கையில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவரை கைது செய்ய சர்வதேச பொலிஸார் பிடிவிராந்தை பிறப்பித்திருந்தனர். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியேறிய சிசிலியா கொத்தலாவல, இங்கிலாந்தில் இருந்து கட்டார் வழியாக இலங்கை வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.