SLFP யுடன் நான் ஏன் இணையவில்லை : சரத் பொன்சேகா !

sarath fonseka ranil
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருக்கின்றமையே தான் அந்த கட்சியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சிக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.

தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாகவே அரசியல் வாழ்க்கைக்கு பிரவேசித்ததாகவும், அதனால் தனக்கு இந்த பயணத்தை முன்னோக்கி செல்ல இலகுவாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.