யோசித்த குற்றமுள்ளவரா? அல்லது அப்பாவியா? என்பது கண்டறியப்பட வேண்டும் : நிமல் !

nimal4
 யோசித்த மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரணை செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரியுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று கொழும்பில் ஊடகங்களிடம் இந்த கருத்தை வெளியிட்டார். 

அத்துடன் யோசித்தவின் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர் குற்றமுள்ளவரா? அல்லது அப்பாவியா? என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

யோசித்த ராஜபக்சவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்தநிலையில் அவர் நிதி மோசடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமையானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் அதிக அக்கறையை பெற்றுள்ளது. 

இதேவேளை தம்மை பொறுத்தவரையில் நிதி மோசடிகளுக்கு எதிரான பொலிஸ் பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்