அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதமரின் அழைப்பின்பேரில் துருக்கி விஜயம்!

ஷபீக் ஹுஸைன்
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதமர் ரணிலின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (3) புதன் கிழமை துருக்கி நாட்டுக்கு செல்லவுள்ளார்.
HAKEEM
இவ்விஜயத்தின்போது, துருக்கி நாட்டின் ஜனாதிபதி தாயிப் எர்டோகான் அவர்கள் உட்பட அரசியல் பிரமுகர்களை சந்திப்பதுடன், தேயிலை ஏற்றுமதி அபிவிருத்தி, வட – கிழக்கு மீள் குடியேற்றம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினால் செயற்படுத்தப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு துருக்கி நாட்டினுடைய ஒத்துழைப்பையும் இவ்விஜயத்தின் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரவுள்ளார்.
இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள், அபிலாஷைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் வலுவான  யோசனைகளை தயாரிப்பது குறித்து கலந்துரையாட பிரித்தானிய சென்றுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரித்தானியாவிலிருந்து நாளை துருக்கி நாட்டுக்கு செல்லவுள்ளார்.