ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அருகே குண்டு வெடிப்பு!

 

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள டே மஸாங் பகுதியில் பாராளுமன்றத்தின் அருகே இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

9d8f0352-2338-40a0-b0a3-9ace5e817cd7_S_secvpf

சுமார் 84 ஏக்கர் நிலபரப்பில் 90 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்தியாவால் கட்டித்தரப்பட்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறந்துவைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே சிறப்புரையாற்றினார்.

இந்த பாராளுமன்றத்தின் அருகே இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
.