பிரதம ஆசிரியராக சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் நியமனம் !

 

 மருதமுனை ஒண்லைன் இணையத்தளத்தின் பிரதம அசிரியராக சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.எ.காதர் நியமிக்கப்படடுள்ளார்.2016.01.01ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் இவருக்கான நியமனக்கடிதத்தை மருதமுனை ஒண்லைன் இணையத்தளத்தின் ஸ்தாபகரும்,பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான சுகைல் ஜமால்தீன் முன்னிலையில் மருதமுனை ஒண்லைன் முகாமையாளர் அப்சர் முகம்மது இஸ்மாயில் வழங்கினார்.இந்த நிகழ்வில் ஒண்லைன் உறுப்பினர் ஏ.டபள்யு.அஸிமும் இணைந்து கொண்டார்.

1-PMMA CADER-31-12-2015-2

2009 ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி மருதமுனை ஒண்லைன் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது அன்று முதல் இன்று(2015-12-31)வரை இந்த இணையத்தளத்தின் பிரதம செய்தியாளராக பி.எம்.எம்.ஏ.காதர் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை அரசாங்கத் தகவல் தி;ணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு இந்த இணையத்தளம் இயங்கிவருகின்றது.தினமும் பெரும் அளவிலான வாசகர்கள் இந்த இணையத்தளத்தைப் பார்வையிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சுகைல் ஜமால்தீன்
ஸ்தாபகரும்,பிரதம நிறைவேற்றுப்பணிப்பாளரும்,
மருதமுனை ஒண்லைன்