ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டார் !

பர்சான் முகம்மட்
12431453_431571923702710_725788234_n_Fotor
 
 நேற்று வெள்ளிக்கிழமை(25) மாலை நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டு நிறைவு விழாவும், ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்விலும் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம்,ஆரிப் சம்சுதீன்,கே.ஜவாத் உட்பட பலரும் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களைப் பாராட்டிக் கௌரவித்தனர்.
இதில் கடந்த 18 வருடங்களாக அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளராக பணியாற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் பொன்னாடை போர்த்தி,நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
12431562_431568143703088_1831509787_n_Fotor
12434253_431566663703236_539370868_n (1)_Fotor
a9760240-390b-42d6-a97a-ce6a0e15ffed_Fotor