ஜனாதிபதி செயலணி….

logo_01(1)

 அரச சொத்துக்களை மீள பெற்றுக் கொள்வது தொடர்பான விஷேட ஜனாதிபதி செயலணி ஒன்று நேற்று  (30) நிறுவப்பட்டது ..

அரச சொத்துக்களை மீள பெற்றுக் கொள்வது தொடர்பான விஷேட ஜனாதிபதி செயலணியில் 13 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான  நியமண கடிதங்களை  ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன வழங்கி வைத்தார் 

பிம்பா திலகரத்ன , எச்.எம்.எல்.டீ முதலிகே , எச்.அமரதுங்க ,சீ.ஏ.எச்.எம். விஜேரத்ன , ஏ.கே.டீ.டீ.டீ.அரந்தர ,எல்.எஸ்.பதிநாயக மற்றும் தில்ருக்ஷி டயஷ் விக்ரமசிங்க ஆகியோர் இந்த செயலணியில் உள்ளடங்குகின்றனர். கல்யாணி தஹநாயக்க , ஜகத் பீ விஜேவீர , டீ.பீ.என். ஜயவர்தன , சீ.ஏ.பிரேமசாந்த , ஜனாதிபதி சட்டதரணி யசன்த கோதாகொட மற்றும் சிரேஷ்ட சட்டதரணி ஜே.சீ.வெலியமுன ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.