சத்தமாகப் பேசினால் மூளை இயங்காது: ஆய்வில் முடிவு

மனித மூளையில் ‘புரோகா’ என்ற ஒரு பகுதி, பேசுவதை கட்டுப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது.

சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கருத்துதான் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் சத்தமாக பேசும்போது, மூளையின் குறிப்பிட்ட பகுதி இயங்காமல் போய்விடும் என்று கூறியுள்ள அவர்கள், அதற்கான அறிக்கை ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர்.