முதிய நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆண் செவிலியருக்கு சிறை !

சர்வதேச முதியோர் தினத்தன்று பதிவிடப்படும் இந்த செய்தியே, உலகம் முழுவதிலும் உள்ள முதியோர்கள் எப்படிப்பட்ட நிராதரவான நிலையில், தன் சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூட ஆளின்றி சாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு. 

9fdbd138-1112-4ae5-8415-36600b590fcb_S_secvpf

பின்லாந்து நாட்டில் 74 முதல் 100 வயது வரையிலான முதிய நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்த, 24 வயது கொடூரனுக்கு நேற்று அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.  
தென்மேற்கு பின்லாந்தின் பிர்கன்மா பகுதியில், உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் இந்த மனிதமிருகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக 27 முதியவர்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது நேற்று நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த கொடூரனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

மறதி, பேச முடியாமை, வாதம் போன்ற நோய்களால் துன்புறுவதால் தங்களுக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை அவர்களால் வெளியே கூட சொல்ல முடியவில்லை. முதியவர்களின் நலன் கருதி சம்பவம் நடந்த இடத்தின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.