தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பழைமை முறைமைக்கு அமையவே இம்முறை பரீட்சையும் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின்போது மாணவர்களுக்கு ஒரு வினா பத்திரத்தை மாத்திரம் வழங்குவதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு யோசனை முன்வைத்திருந்தது.

எனினும் பழைய முறைமைக்கு அமைய இம்முறை பரீட்சையை நடத்துவதற்கு, பின்னர் பரிந்துரை செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை மார்ச் 6ஆம்  திகதி நடைபெறவுள்ளது.