அமைச்சரவை 20ஆவது திருத்தத்துக்கு அங்கிகாரம் வழங்கியுள்ளது!

maithripalas-first-cabinet

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை, கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், அமைச்சரவைக்கு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கே, அமைச்சரவை கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது.  தேவையேற்படின் அவரச சட்டமூலமாக அந்த திருத்தத்தை கொண்டுவருவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.  அடுத்த அமைச்சரவை கூட்டத்துக்கு முன்னர், கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் மீண்டும் கலந்துரையாடுவதற்கும் இதன் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தத்தின் பிரகாரம், முழு எம்.பி.க்களின் எண்ணிக்கை 255 ஆகும், அதில் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் 165 உறுப்பினர்களும் தோல்வியடைந்தவர்களில் 66 உறுப்பினர்களும் தேசிய பட்டியலில் 24 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.