சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றார் – பசில் ராஜபக்சே !

1-copy

பொருளாதார அபிவிருத்தியமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மே மாதம் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ, சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தன்னை  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு அதிகாரசபையை அவர் கோரியுள்ளார்.

எனினும், சிறைச்சாலை வைத்தியர், பசிலை சோதனை செய்த பின்னரே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.