தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 322 பேர் கைது !

 

Voilence

பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 112 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 283 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தேர்தல் வன்முறைகள் குறித்து 113 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் வன்முறைகள் குறித்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.