ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசோடு ஒன்று பட்ட ஏறாவூர் நகரமும் பொதுக்கூட்டமும்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுத்தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அலிஷாஹிர் மெளலானவை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஏறாவூர் புன்னைக்குடா வீதி மெளலானா சதுக்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.

DSC_6454_Fotorமுஸ்லிம் கங்கிரசின் உயர்பீட உறுப்பினர் எம்.எச்.கபூர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும், நீர்வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளருமான  ரவூப் ஹக்கீம் மற்றும் விஷேட அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
DSC_6464_Fotor
ஏறாவூர் நகரமே வெடில் முழங்க ஏறாவூருக்கான வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உருப்பினரும் இன்றைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான செய்யத் அலிஷாஹிர் மெளலானாவை ஆதரித்து ஊர்வலமாக ஏறாவூர் புன்னைக்குடா வீதியால் பொதுக்கூட்ட மண்டபத்துக்கு அதிதிகள் சகிதம் அழைத்துச்செல்லப்பட்டனர்.
குறித்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கட்சியின் தலைவர் பொத்துவில், சாய்ந்தமருது, காத்தான்குடி ஆகிய இடங்களில் இடம்பெறும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்ள ஏறாவூர் கூட்ட மேடையில் இருந்து மாலை 5 மணிக்கு உலங்கு வானூர்த்தி மூலம் 
விடைபெற்றுச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

DSC_6531_Fotor