ஐ.பி.எல். சீசன் 10-ன் 23-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றது.
முன்னதாக...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா பணம் வழங்கியமை தற்போது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது போல இன்னும் எவற்றுக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டன என்பதுதொடர்பில் பல உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் எனபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா பணம் வழங்கியமை தொடர்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஊடாக தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இது ஒரு விடயம் மாத்திரம்தான்.இன்னும்பலஉண்மைகள் விரைவில் வெளிச்சத்து வரும்.முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்க இந்தியா வழங்கிய பணம் தொடர்பில் முஸ்லிம்காங்கிரஸுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
இலங்கை சிறுபான்மை மக்களை எம்மிடம் இருந்து பிரிக்க பாரிய சதிகள் மேற்கொள்ளப்பட்டன.அதற்காக வெளிநாடுகள் பாரியஅளவில் பணம் வழங்கியுள்ளமையை அறிந்துகொள்ள முடிகிறது.மு.காவிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் செய்தியானது இவ்வாட்சியை கவிழ்க்க முஸ்லிம்களே பிரதான ஆயுதமாக பாவிக்கப்பட்டுள்ளார்கள் என்பதாகும்.
சர்வதேசம் ஒரு ஆட்சியை கவிழ்க்க சிந்தித்தால் அவர்கள் தேர்தல் காலப்பகுதியில் மாத்திரம் முயற்சிக்கமாட்டார்கள்.பல வருடங்கள்முன்பே பல திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். அவ்வாறே எமது ஆட்சிக் காலத்தில் பல திட்டமிடப்பட்ட சதிகள் மூலம்எம்மிடமிருந்து முஸ்லிம்கள் பிரிக்கப்பட்டார்கள்.சில வேளைமு.காவிற்கு வழங்கப்பட்ட பணமானது தேர்தலுக்காக அல்லாமல்முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரித்த கொந்தராத்துக்காகவும் வழங்கப்பட்டிருக்கலாம்.பணம் வழங்கி ஆட்சியை கவிழ்ப்பதுநேர்மையான முறையல்ல.எமது ஆட்சியை குறுக்கு வழியிலேயே கவிழ்த்துள்ளனர்.இந்தியாவின் கூட்டு சதியால் உருவாக்கப்பட்டுள்ளஇவ்வாட்சியின் பின்னால் செல்வது நல்லதல்ல.
இந்தியாவிற்கு வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து தனது தலை வலியை தீர்க்க வேண்டிய மிகப் பெரிய தேவை உள்ளது.எமது ஆட்சிக்காலத்திலேயே அவைகள் பிரிக்கப்பட்டன.அவர்களின் கனவு எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெறாது என்பதெல்லாம் இந்தியாவிற்குநன்றாகவே தெரியும்.இன்று இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களின் முஸ்லிம்களிலுடனான போக்கு அனைவரும்அறிந்ததே.அவர்களின் திட்டங்கள் எவ்வாறு இருக்குமென சற்று சிந்தனை செய்து கொள்ளுங்கள்.அவர்களின் திட்டங்களுடனானஆட்சி இலங்கையில் நிறுவப்பட்டால் என்ன நடக்கும்?
எனது தந்தை எட்டு வருடங்களாக இந்தநாட்டின் ஜனாதிபதியாக இருந்துள்ள போதும் கடைசி இரண்டு வருடங்களிலேமுஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் நாட்டில் தலைதூக்கியது.சம்பிக்க போன்றவர்களே அதனை ஆரம்பித்து வைத்தார்கள்.
அதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.அது தொடர்பில் நாம் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என நினைக்கின்றேன்.நாம்இனவாத போக்குடையவர்கள் என்றால், ஏன் எமது ஆட்சிக்காலத்தின் முதல் எட்டு வருடத்தில் இனவாதத்தை வெளிக்காட்டவில்லை?
ஆட்சிக் கவிழ்ப்புக்கு எவ்வாறு வெளிநாடுகளால் பணம் வழங்கப்பட்டதோ அது போன்றேசிறுபான்மையின முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்கவும் பணம் வழங்கப்பட்டுள்ளது.ஆட்சியை கவிழ்க்க பணம் வழங்கப்பட்ட சங்கதி எவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவெளியே வந்ததோ அது போன்று முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரிக்க பணம் வழங்கப்பட்டது தொடர்பிலும் பல உண்மைகள்விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.
இந்திய அரசு எமது ஆட்சியை கவிழ்க்க பணம் வழங்கியதாக கூறப்படுகின்றமை சாதாரண விடயமல்ல.இந்திய அரசு கடந்த தேர்தல்காலத்தின் போது எமது ஆட்சியை கவிழ்க்க பணம் வழங்கியதா என்பதை இதன் பின்னால் ஒழிந்துள்ள பாரதூரங்களை அறிந்து இந்தியதூதரகம் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது அறிக்கையில்குறிப்பிட்டுள்ளார்.
-ஊடகபிரிவு-
இறக்காமத்து மாயக்கல் விவகாரம் இன்று பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றது. கண்கட்டி வித்தைகளினால் நம் மக்களின் பூர்வீகக் காணிகளைத் திட்டமிட்டு அபகரிப்பதற்கு தீய சக்திகள் வலிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கின்றார்கள்.
அவர்களுடைய தீய எண்ணங்களை நடைமுறைப்படுத்தவதற்கு முதற்கதவாகவே...
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எமது ஆட்சிக்காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இதன் காரணமாகவே மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பிலும், குப்பைகளை அகற்றுவதற்கும் எம்மால் முடியாது போனதாக முன்னாள் ஜனாதிபதி...
"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற கொள்கையை பிரயோகித்து வெற்றியில் ஊறிப் போன ஹக்கீம் ஒவ்வொரு ஊரிலிருக்கும் முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளையும், ஆதரவாளர்களையும் ஒன்றிணைந்து செயற்பட முடியாதபடி பல பிரிவுகளாகப்...
முஸ்லிம்களின் வர்த்தகத்தை அழித்து அவ்விடத்தை பெரும்பான்மை மக்கள் கைப்பற்றிக் கொள்ளும் வகையிலான திட்டங்களை தற்போது இனவாதக்குழுக்கள் மேற்கொண்டுள்ளன. இதன் பிரதிபலனே போர்வை நகரில் முஸ்லிம்களின் கடைகள் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலாகும்....
நடிகை குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பிரசாரம் செய்தேன். அப்போது தேர்தல் விதிகளை...
பிரான்சை சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் (44). இவர் அதிசய நிகழ்வுகள் செய்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு முன்பு கரடி பொம்மைக்குள் நீண்ட நேரம் அடைந்து கிடந்து சாதனை...
அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள காணிகளை இரண்டாவது தடவையாகவும் ஆக்கிரமிக்கும் முயற்சியை நேற்று வியாழக்கிழமை பௌத்த பிக்குகள் மேற்கொண்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் அப் பகுதியில் புத்தர் சிலை...
கூட்டு எதிர்க்கட்சியின் பலம் மே தினக் கூட்டத்தில் நிரூபிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கூட்டு எதிர்க்கட்சியின்...