- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தியாகத் தலைவனின் வழியில் செல்வோம் புறப்படுங்கள், கட்சியின் விடுதலைக்கு கன தூரமில்லை.

தலைவர் அஷ்ரஃப் கேட்ட ஒரேயொரு கேள்விக்கு முஸ்லிம் மக்கள் தந்த உறுதியான பதிலில் முஸ்லிம்களின் தனித்துவமான அடையாள அரசியல் குழந்தை பிறந்தது. சிங்களவர்களுக்கு பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன, தமிழர்களுக்கு என்றும் கட்சிகள்...

ஜெயலலிதா அறையில் பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்…

தமிழக முதல்வராக தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறைக்கு சென்ற பழனிச்சாமி, அவரது உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை...

சதியைமுறியடிக்கும் வகையிலேயே அரிசிக்கான நிர்ணய விலைதீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

   சுஐப் எம் காசிம் அரிசிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசாங்கத்தைஇக்கட்டான நிலையில் ஆக்குவதற்கு மேற்கொண்ட சதியைமுறியடிக்கும் வகையிலேயே அரிசிக்கான நிர்ணய விலைதீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று 20 மாலைஇடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துதெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட வரட்சியை காரணம் காட்டிஅரிசிக்கு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதனால்தான் வெளிநாடுகளில் இருந்து அவசரமாக அரிசியைஇறக்குமதி செய்வதற்கு இடமளித்தோம். இறக்குமதியாளர்களின் கோரிக்கைக்கேற்ப தீர்வை வரியையும்குறைத்தோம். 2.5 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதிசெய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்த போதும் இற்றைவரை 86 ஆயிரம் மெற்றிக் தொன்னே இறக்குமதிசெய்யப்பட்டுள்ளது. மாதமொன்றுக்கு நுகர்வோரின் அரிசிப்பாவனையைக் கணக்கிட்டே அமைச்சரவை அந்த அனுமதியைவழங்கியது. இறக்குமதி அரிசிக்கு நிர்ணய விலைதீர்மானிக்கப்பட்டது.  உள்ளூர் நெல் உற்பத்தியாளர்கள் தமக்கு நஷ்டம் ஏற்படுவதாகதெரிவித்ததனால் ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்கவாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழு கூடிஉள்ளூர் அரிசிக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனால்தான் ஒரே வகையான பொருளுக்கு இரண்டு விலைகள்நிர்ணயிக்கப்பட்டது. சந்தையில் அரிசியைப் பதுக்கி வைத்து நுகர்வோருக்குவிலையக் கூட்டி விற்றதனால் தான் அரசாங்கம் நிர்ணயவிலையை அமுல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம்ஏற்பட்டதென்றும் அமைச்சர் தெரிவித்தார். இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்வதில்பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் அவர்கள்தாங்கள் நினைத்த மாத்திரத்தில் நடக்க முடியாது. இறக்குமதியாளர்கள் முறைகேடுகளை மேற்கொண்டால்அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் வகையில்நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் களத்தில் நிற்கின்றனர். அதே போன்று வியாபாரிகளும் நிர்ணய விலையை விடஅதிகமாகவோ அல்லது பாவனைக்குதவாத அரிசியையோவிற்பனை செய்தால் அவர்களுக்கும் கடுமையான தண்டனைபெற்றுக் கொடுப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் இன்னொரு குழு இயங்கி வருகின்றது. இதை விட எந்த முறைகேடுகள் நடந்தாலும் 1977என்ற நுகர்வோர் அதிகார சபையின் இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களைத் தந்தால் உரிய நடவடிக்கைஎடுக்கப்படும். ஊடகவியலாளர்கள் இந்த நடவடிக்கைகளுக்குஉதவுவது கடனாகுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.  இறக்குமதி அரிசியில் இரசாயனக்கலவைகலக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனரே என ஊடகவியலாளர்ஒருவர் அமைச்சரிடம் கேட்ட போது, அவ்வாறு ஏதும் நடைபெற்றால் ஊடகவியலாளர்கள்எங்களுக்கு உதவ வேண்டுமேயொழிய ஆதாரபூர்வமற்றசெய்திகளை பரப்பி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதுதார்மீகமல்ல என அமைச்சர் வேண்டினார். கடந்த வாரம் புறக்கோட்டை அரிசிச்சந்தைக்கு நான் திடீர்விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். ஊடகவியலாளர்களும் என்னுடன் வந்திருந்தனர்.  அரிசி வியாபாரிகள், மொத்த வியாபாரிகள், வியாபாரிகள்சங்கம் ஆகியோருடன் பேசிய போது, போதிய அளவு அரிசிகையிலிருப்பில் இருப்பதாக அவர்கள் கூறி எனக்குகாண்பித்தனர்.அரிசிக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லையெனஊடகவியலாளர்கள் முன்னிலையில் வெளிப்படையாகத்தெரிவித்தனர்.  இன்று எமக்குக் கிடைத்த தகவலின் படி சுமார் 4 இலட்சம்மெற்றிக் தொன் அரிசி கையிலிருப்பில் உள்ளது. மொத்தவியாபாரிகள் ஐந்து ரூபா அல்லது ஆறு ரூபா குறைத்தேசந்தைக்கு அரிசியை விநியோகிக்கின்றனர். எந்தத்தட்டுப்பாடும் இல்லாத போதும் அரிசி விலைகுறையவில்லையெனக் கூறுவது அரசின் மீது வீண் பழிசுமத்துவதற்கே. இவர்கள் குறித்து அரசுக்கு நிறையசந்தேகங்கள் இருக்கின்றன. அத்துடன் இனி வரும்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும்போதுஅரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நிரந்தரமான இருப்பைக்கொண்டவாறான (Buffer Stock) ஒரு பொறிமுறையைஏற்படுத்தி 1 இலட்சம் மெற்றிக் தொன் வரையில்களஞ்சியப்படுத்துவதற்கான திட்டமொன்றைநடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அலோசனைவழங்கியுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் தகவல்திணைக்களப்பணிப்பாளர் ரங்கன் கலசூரிய, நுகர்வோர்பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன, கூட்டுறவு மொத்த விற்பனைத் நிலையத் தலைவர் ரிஸ்வான்மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.  

ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் தெரிவிப்பு

புளோரிடாவில் நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். புளோரிடாவில் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் போன்ற பிரமாண்ட கூட்டத்தில்...

உலக வர்த்தக மைய ஒப்பந்தந்தின் வேலைப்பட்டறையில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட்..

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்ட உலக வர்த்தக மைய ஒப்பந்தந்தின் கீழான கழிவற்றல், தாவரக்கழிவகற்றல் அளவீடுகள் மற்றும் வர்த்தகத் துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான தடைகள் தொடர்பிலான...

Latest news

- Advertisement -spot_img