இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையில், சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியன்று காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை,...
கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்க...
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விளையாட்டு நிறுவனமான நைக்கி, உலகிலுள்ள எல்லோருமே போற்றுகின்ற பன்முகத்தன்மையின் செல்வாக்கு , அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் உலகளவில் 10 ஆயிரம் அகதிகளை பணிக்கு...
அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக உள்நாட்டுப்போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்தார்.
மேலும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா,...
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிய முஸ்லிம் தலைவர்களை தேசத்துரோகிகள் என அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து அவர்களை தேசப்பற்றாளர்கள் என அறிவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா...
A.R.A.Raheem
மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற வட்டக்கண்டல் படுகொலையின் 32வது ஆண்டு நிறைவு கூறும் நிகழ்வு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் அ.தேவதாஸ் தலைமையில் இடம்பெற்ற...
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானங்களின் சாதகத்தை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கைகளில் எடுக்க வேண்டும் என முன்னாள் ராஜதந்திரியான...
ஊடகப்பிரிவு
மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்திற்குச்செல்லும் மறிச்சுக்கட்டி – இலவங்குளப்பாதையைமூடவேண்டுமென்று ஆறு வருடங்களுக்கு முன்னர் அரசசார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று உச்ச நீதிமன்றில்தாக்கல் செய்த வழக்கு இன்று 30 விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் சார்பில் முதன் முறையாக சட்டத்தரணி ருஷ்திஹபீபின் நெறிப்படுத்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஆஜராகியிருந்தார்.
இதுவரை காலமும் இந்த வழக்கில் அமைச்சர் ரிஷாட்பதியுதீனுக்கு சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகளேஆஜராகி வந்த நிலையில் அதற்கு மேலதிகமாக ஜனாதிபதிசட்டத்தரணி அலிசப்ரி ஆஜராகி தனது வாதங்களைமுன்வைத்தார்.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதிக்குவிசாரணைக்காக எடுக்கப்படுமென நீதிபதி அறிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழக்கு விசாரணையின் பின்னர்ஊடகவியலாளருக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது,
நூற்றுக்கணக்கான வருடங்களாக மக்களினால் பாவிக்கப்பட்டுவருகின்ற இந்தப் பாதைய மூடவேண்டுமென்று அரச சார்பற்றநிறுவனம் ஒன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்தப் பாதைதிறக்கப்படுவதால் குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ளவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுமென்றும் இது நெடுஞ்சாலைப்பாதையெனவும் கூறியே சூழலியல் நிறுவனமொன்று இந்தவழக்கை தாக்கல் செய்துள்ளது. மக்கள் பயன்படுத்தும்இந்தப்பாதையை மூட வேண்டுமெனவும் அதனைசெப்பனிடக்கூடாதெனவும் கூறுவது நியாயமானதொன்றல்ல.உண்மையில் இது நெடுஞாலைப்பதையுமில்லை. பொறல்பாதையாக இருக்கும் இதில் சிங்கள, முஸ்லிம் மக்கள்நீண்டகாலமாக பயன் படுத்தி வந்தனர். இராணுவமும்இதனைப்பயன்படுத்துகின்றது.
மன்னார் புத்தளம் வழியாக இந்தப்பாதையூடாக கொழும்புக்குமிகக் குறுகிய நேரத்தில் சென்றடையலாம். 32 கிலோ மீற்றர்நீளமான இந்தப்பாதையை மூடுவதன் மூலம் மக்களுக்குபல்வேறு கஷ்டங்கள் இருக்கின்றன. அதுவும் இடம்பெயர்ந்தமக்கள் தமது சொந்தக் குடியிருப்புக்களில் மீளக்குடியேறமுயற்சிக்கும் போது இந்தப் பாதையை மூடுவதற்கு முயற்சிகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை செப்பனிட்டு பயன்படுத்துவதன் மூலம் விலங்குகளுக்கு எந்தப் பாதிப்போஆபத்தோ ஏற்படப்போவதில்லை. எனவேதான் இதனைப்பயன்படுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கவேண்டாமென வலியுறுத்தி வருகின்றோம். அதற்காகவே எனதுசார்பில் மக்களின் நன்மை கருதி ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி இந்த வழக்கில் ஆஜராகியதாக அமைச்சர் ரிஷாட்தெரிவித்தார்.