- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

கல்முனை மீனவர்கள் 6 பேருடன் கடலுக்கு சென்ற 2 படகுகள் மாயம்!

அஸ்லம் எஸ்.மௌலானா,முஹம்மட் றின்ஸாத் கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுடன் கடலுக்கு சென்ற மீன்பிடி இயந்திர படகுகள் இரண்டு காணாமல் போயுள்ளதாக கல்முனை மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்முனைக்குடி கபீர் ஹாஜியார் என்பவருக்கு...

அதிபர் ஒபாமா உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டனர்!

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன்காரணமாக வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து அந்நாட்டு...

வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையில் மாற்றம் : நிதி அமைச்சர்

வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனையில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.   குறித்த யோசனையில் திருத்தங்களை மேற்கொண்டு இந்த வருடத்தில் மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர்...

தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதே தேசிய அரசாங்கத்தின் நோக்கம்: பிரதமர் தெரிவிப்பு

தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதே தேசிய அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான நத்தார் மரத்தை மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும் இறுதி நிகழ்வு...

இந்தக் காலகட்டத்தில் காய்ச்சல் வந்தால் டெங்கு என நினைத்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

பி.எம்.எம்.ஏ.காதர் உங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் இந்தக் காலகட்டத்தில் டெங்கு என்பதாகவே நினைத்துக் கொண்டு உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!அந்த வகையில் நீங்கள் கவனிக்க வேண்டிய விடயங்களாவன. 01) காய்ச்சல் ஏற்பட்ட முதலிரண்டு நாட்களுக்கும் பரசிற்றமோல்(Paracetamol) மாத்திரம் அவரவருடைய...

அரசியலமைப்பை உருவாக்க முன் இன்னுமொரு திருத்தமா?

  திருவிழாக் கொண்டாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் லயித்திருக்கின்ற ஒருசில பெற்றோர் சில வேளைகளில் தமது பிள்ளைகளையே தொலைத்துவிடுவதுண்டு. பிள்ளைக்கு ஒரு இனிப்பு பண்டத்தை காட்டிவிட்டு பெறுமதியான தங்க நகைகளை களவாடிச் சென்ற கதைகளையும் நாம் கேள்விப்...

அமரர். சந்திரசேகரனின் உருவ சிலையை வைப்பதற்கு பூரண ஒத்துழைப்பு தருவேன்:அமைச்சர் திகாம்பரம்

க.கிஷாந்தன்   மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர்.பெ.சந்திரசேகரனுக்கு தலவாக்கலையில் உருவ சிலை அமைக்கப்படும். இதற்காக அமரரின் குடும்பத்தாரருடனும், கட்சி முக்கியஸ்தர்களிடமும் கலந்தாலோசித்து முன்னெடுக்கப்படும் செயலுக்கு தான் ஆதரவு தருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள்...

இலங்கை மத்திய வங்கி விவகாரம்- எவருக்கும் சலுகையை வழங்க தயாரில்லை : ஜனாதிபதி

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர மோசடி சம்பந்தமாக சட்டத்தை அமுல்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தான் கடுமையான நிலைப்பாட்டில்...

தமது வாழ்விடத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போரிடுவதும் புனிதப் போராட்டமே!

கிழக்கு முஸ்லீம்களின் பூர்வீக காணிகளை, புனித பிரதேசமென்றும்,  வடக்கு முஸ்லீம்களின் பூர்வீக காணிகளை, வனப்பிராந்தியம்என்றும் பிரகடனப் படுத்தி, முஸ்லிம்களின் பாரம்பரிய காணிகள் பறிக்கப்பட்டுக் கொண்டு செல்கின்றது.  ஏற்கனவே கிழக்கில் அறுபதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணிகளை இழந்த நிலையில், இம் முன்னெடுப்பு ஒரு திட்டமிடலின்மூலம், வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. இது பௌத்த தேசம், நாங்கள் விரும்பியதை செய்வோம் என்ற எண்ணத்தில் நல்லாட்சி ஜனாதிபதியும் நடந்து கொள்ளஆரம்பித்திருப்பது, அவரைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட முஸ்லிம்களை, பானையில் இருந்து அடுப்புக்குள் விழுந்த நிலைக்குத்தள்ளியிருக்கின்றது. இந்நிலமைகளில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனம் காத்துக் கொண்டிருக்கின்றனவா? மக்கள் ஆணையைப் பெற்று அதிகாரங்களில் இருக்கும்  அனைத்து முஸ்லிம்  அரசியல் தலைமைகளும் குறைந்தபட்சம் அரசைஎச்சரிக்கும் முகமாக இந்நடவடிக்கைகளுக்குத் தமது எதிர்ப்பை பகிரங்கமாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்த  வேண்டும். இறக்காமம் பிரதேசத்தில் சிலை வைத்த விவகாரத்தை முறையோடு கையாளாத காரணங்கள் போன்றவற்றாலேயே, இத்தொடர்அநியாயங்கள் இடம் பெறுவதை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.  புத்தர் சிலை வைப்பதால் முஸ்லிம்கள் மதம் மாறிவிடமாட்டார்கள் என்று கூறியவர்கள், பள்ளிவாசலையும் அதைச் சார்ந்தபிரதேசத்தையும்  பௌத்த புனித பிரதேசங்களாக பிரகடப்படுத்தினால், முஸ்லிம்கள் வீடுகளில் தொழுது கொள்வார்கள் என்றுசமாதானம் சொல்லிவிட்டு, தமது பைகளை நிரப்புவதிலும் பதவிகளை தக்க வைத்துக்கொள்வதிலும் கவனமாய் இருப்பார்கள். ஆனால் இந்நிலை தொடருமாயின் நாடு முன்னிலும் பார்க்கப் பாரிய அழிவொன்றை மீண்டும் சந்திப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். தமது வாழ்விடத்தைப்பாதுகாத்துக் கொள்வதற்காகப் போரிடுவதும் புனிதப் போராட்டமே! தனிநபர் அதிகாரத்துக்கும், ஊர்களின் அதிகாரங்களுக்கும் நீங்கள் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். முஸ்லிம் தேசியத்தின் இருப்பை உறுதிசெய்வதற்காக எமது பேராயுதமான பேரியக்கத்தை எம்மிடம் ஒப்படையுங்கள். உங்களால் இயலாது என்பதனாலேயே எங்களிடம் எமது கட்சியைத் தந்துவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள் என்று பலமுறைகூறியுள்ளோம். மீண்டும் அதையே கூறுகிறோம். ஏனைய தலைவர்களும் இவ்விடயத்தில் முஸ்லிம்களை கைவிடுவது போல் நடந்து கொள்ள முற்படுவதுதொடருமானால், அரசுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுமாற்போல் கிழக்கு வடக்கு மக்கள் ஒருங்கிணைந்த ஒருமாபெரும் ஆர்ப்பாட்டத்தைச் செய்து தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டி வரும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.   கிழக்கின் எழுச்சி

மூன்று ஆலயங்களில் கொள்ளை, திருடன் சி.சி.டி.வி கண்காணிப்பு கமராவில் பதிவு

க.கிஷாந்தன் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா பகுதியில் டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேல்பிரிவு மருதவீரன் ஆலயம், வனாராஜா விநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் 01.01.2017 அன்று அதிகாலை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக அட்டன் பொலிஸார்...

Latest news

- Advertisement -spot_img