- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

25 முஸ்லிம் கலைஞர்கள் அரச கலாபூஷண விருது பெற்றனர்..

ஏ.எஸ்.எம்.ஜாவித் 2016 ம் ஆண்டின் 32 வது அரச கலாபூஷணம் விருது வழங்கும்; விழா உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்து சமய கலாசார...

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பம் கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்படும் :பிரதமர்

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான குறித்த குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ள அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது நாளொன்றை ஒதுக்கித் தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் இன்று(27) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

92 உயிர்களை பலி வாங்கிய ராணுவ விமானத்தின் முதல் கருப்பு பெட்டி கிடைத்துள்ளது !

சிரியாவின் லட்டிக்கா மாகாணத்தில் ஹமெய்மிம் என்ற இடத்தில் ரஷிய படைகளுக்காக ராணுவ தளம் அமைத்து தரப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போர் விமானங்கள் இந்த முகாமில் இருந்துதான் புறப்பட்டு செல்கின்றன. இந்நிலையில், வரும்...

முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பாகும் : அமைச்சர் ரிஷாட்

முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவுநாட்டிற்குப் பேரிழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இடதுசாரிச் சிந்தனையைக் கொண்ட முன்னாள் பிரதமர்ரட்னஸ்ரீ விக்ரமநாயக, தனது அரசியல் வாழ்வை லங்கா சமசமாஜக் கட்சியின் மூலம் தொடங்கினார். பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில்ஈர்க்கப்பட்டமையினால் அக்கட்சியில் இணைந்துகொண்டார். அமரர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் அரசியல்வாழ்வில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். மிகமுக்கிய அமைச்சுக்களான பெருந் தோட்டத்துறை, பொதுநிர்வாகம் ஆகியவற்றை இவர் பொறுபபேற்றிருந்தகாலங்கட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களினதும், அரசசேவையாளர்களினதும் நலன்களுக்காக காத்திரமானதிட்டங்களை முன்னெடுத்தவர். ஐக்கிய இராச்சியத்தில் இவர் கற்கின்ற காலத்தில் இலங்கைமாணவர்களின் தலைவராக பணியாற்றி இலங்கை தொடர்பில்பிறநாட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திளவர். காலஞ்சென்ற ரட்னஸ்ரீ விக்ரமநாயக பிரதமராக பதவியேற்றகாலத்தில் விவசாயிகளுக்கு அதியுச்ச நண்மைகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.  பத்திரிகைத் துறையில் மிகுந்த ஈடுபாடுகொண்ட அன்னார்ஊடகவியலாளர்களையும், கலைஞர்களையும், கலாவிற்பன்னர்களையும் தட்டிக்கொடுக்கக் கூடியவராகஇருந்ததோடு அவர்களின் பணிகளைப் பாராட்டிகௌரவித்துமுள்ளார். அவரது வாரிசான விதுர விக்ரமராஜ நாயக தந்தையின் வழியில்இன்று அரசியல் நடத்தி வருகின்றார். காலம் சென்ற முன்னாள் பிரதமரின் இழப்பினால் துயருறும்அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிக்கின்றேன்.

Latest news

- Advertisement -spot_img