- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வெடிப்புச் சம்பவ விசாரணைகளை நடத்த இராணுவ நீதிமன்றம் – தேசிய பாதுகாப்பு பேரவை

கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் தோட்டக்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த இராணுவ அடிப்படை நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்துவது என தேசிய பாதுகாப்பு பேரவை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், சம்பவம்...

பேஸ்புக் நிறுவனரின் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பின்டெர்ஸ்ட், லிங்க்ட்இன் போன்ற சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் 40,000 பேர் பின்தொடர்ந்து வரும் அவர்மைன் (Ourmine) என்னும் ஹேக்கர் குழுவினர்...

ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த ஜெயலலிதா

இன்று மாலை சுமார் 5.45 மணியளவில் போய்ஸ் கார்டனில் இருந்து கிளம்பிய ஜெயலலிதா, ஆர்.கே. நகரின் பல்வேறு பகுதிகளில் கூடியிருக்கும் மக்கள் மத்தியில் தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.  குறைந்தது 20 இடங்களுக்கு...

அனுர சேனாநாயக்கவை சிறையில் சந்தித்த மகிந்த !

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று...

சோற்றுக் கற்றாழை அற்புதமான ஒரு மருந்து..!!

இன்னும் நம்மில் பலர் சாதாரணமாக நினைக்கும் சோற்றுக் கற்றாழை அற்புதமான ஒரு மருந்து. இதன் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. கற்றாழையில் வைட்டமின் சி, தாது உப்புகள், அமினோ அமிலம் ஆகியவை உள்ளன. நுண்கிருமி...

நோன்பு திறப்பதில் “கசகசா ” மூலமாக பாவத்தை சம்பாதிக்கின்றோமா?

    "கட்டாயம் படியுங்கள் பகிருங்கள்" “கசகசா” மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?  ★************★***********★*********** இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள்ஒரு போதைப் பொருளாகும். இதைப் பற்றிய விளக்கத்தை பார்ப்போம். கசகசா வை ஆங்கிலத்தில் Opium Poppy என்று சொல்லப்படும்.   இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அதுமுழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.   ஆனால் பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போதுஅந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம் என்ற போதைப்பொருள்.   இந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார்,குவைத், ஓமான், சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளில் இந்த கசகசா போதை பொருள்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.   இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம். கசகசா தொடர்பாக புதிய தலைமுறை என்ற தமிழக வாரப் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியைபாருங்கள். சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தந்த விளக்கம் :  ”வளைகுடா நாடுகளான சவூதிஅரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள்என்பது முழுக்க முழுக்க உண்மை!   இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும்ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்குகசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது.   கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக ‘கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை’ என்று கொட்டைஎழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம்கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச்சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர்.அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும்எடுத்துப் போனார்.   அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட… எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல்ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர். கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்தியரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன. இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ்புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட்இருக்க… உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!   இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்தநந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டுசட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார்.   இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்தொடர்ந்தார். கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர்முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், ‘உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும்கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்தியமொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள். நாங்களும்எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம். எல்லா வகையான போதைப் பொருட்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “பித்உ’ (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது) பற்றிக்கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்” என்றுபதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் :புகாரி (5585) நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான்அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் “அவை யாவை?” என்று கேட்டார்கள். நான் “அல் பித்உ, அல்மிஸ்ர்’ என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது)ஆகும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல் :புகாரி (4343) கசகசா என்பது அதிகம் சாப்பிட்டால்தானேபோதை வருகிறது. நாம் குறைவாகத்தானே பயன்படுத்துகிறோம் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழிகவனிக்கட்டும். அதிகமா (உண்டால்) போதை தரக்கூடியதில்  குறைவானதும் ஹராமாகும் என்று நபி (ஸல்)அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : திர்மிதீ (1788) எனவே உணவுகளில் கசகசா வை சேர்த்துப்பயன்படுத்துவதையும், கசகசா சேர்க்கப்பட்ட உணவுகளையும் கண்டிப்பாக நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்என்பதே மார்கத்தின் தெளிவான தீர்ப்பாகும்.  

தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயம்

  சாலாவ இராணுவம் முகாமில் பரவிய தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், இந்த பகுதியில் புகைமூட்டம்...

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்

  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹாவில் உள்ள காணி ஒன்றின் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இன்று பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஜோகோவிச்

  கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ்...

Latest news

- Advertisement -spot_img