- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இதய நோயாளிகளுக்கு அற்புத உணவான பார்லி…!

  பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை.  ஆனால், அப்படி...

சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரம்: பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்!

  சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக அலெப்போ நகரில் சண்டை உக்கிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த நகரில் இருந்து வெளியேறி வருகின்றனர். அண்டை நாடான துருக்கியின் பிரதமர்...

சிறுநீரக கடத்தல் சம்பவம் குறித்த அறிக்கை சுகாதார அமைச்சரிடம் ஒப்படைப்பு !

இலங்கை வைத்தியர்கள் சிலர் நாட்டிற்குள் மேற்கொண்ட சிறுநீரக கடத்தல் சம்பவம் குறித்து தேடிப்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினரின் அறிக்கை  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அந்தக் குழுவினர் கடந்த 23ம் திகதி...

சார்க் விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணி சார்பாக மட்டக்களப்பு வீரர் திமொத்தி நிதுர்ஷன் !

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்று ஆரம்பமாகும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் தினேஸ்காந்த் திமொத்தி நிதுர்ஷன் கலந்து கொள்கிறார். இன்று 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும்...

யுத்தத்தினால் நலிவடைந்து போன வடக்கு, கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை கட்டியெழுப்படும் – ஹரீஸ் !

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்    வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு அகடமி நிறுவப்பட்டு அதன் மூலம் எமது வீரர்களுக்குசர்வதேச தரத்திலான பயிற்சிகள் வழங்கி வடக்கு,கிழக்கு மாகாண விளையாட்டுத்துறையினை கட்டியெழுப்புநடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். வட மாகாணத்தின் விளையாட்டு மற்றும் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தி தொடர்பில்ஆராய்வதற்கு வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கானஇரண்டு நாள் விஜயத்தினை பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையிலான விளையாட்டுத்துறை அமைச்சின்உயர் அதிகாரி குழுவினர் மேற்கொண்டுள்ளனர். வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தின் விளையாட்டு மற்றும் விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திதொடர்பில் ஆராயும் மாநாடு வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (05) வெள்ளிக்கிழமை பிரதேசசெயலக கூட்ட மண்டபத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்தலைமையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் தமிழத் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றகுழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான், வட மாகாண கல்வி, கலாச்சார, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பீ.குருகுல ராஜா, முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முத்தலிபா பாறூக், வட மாகாண சபை உறுப்பினர்எம்.எச்.றயீஸ், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ரீ.எம்.ஆர்.டி.திஸாநாயக்கா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.அப்துல் ஹை, இணைப்புச் செயலாளர்எம்.எஸ்.எம்.மிஸ்பர், வவுனிய பிரதேச செயலாளர் கே.உதயராஜா உள்ளிட்ட மாவட்ட விளையாட்டுஉத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு தொடர்ந்த உரையாற்;றிய பிரதி அமைச்சர், கடந்த 30 வருட கால யுத்தத்தினால் நலிவடைந்து போன வட, கிழக்கு மாகாண விளையாட்டுத்துறையினைகட்டியெழுப்புவதற்கான முழு நடவடிக்கையினையும் மேற்கொள்ளவுள்ளேன். இம்முயற்சிக்கு வடக்கு, கிழக்குமாகாண மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றேன். இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் நிம்மதி பெரும்மூச்சுவிடுகின்றனர். யுத்தத்திற்கு பின்னர் வட கிழக்கு வீரர்கள் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்குபற்றிஎமது நாட்டுக்கும் எமது பிராந்தியத்திற்கும் புகழைத் தேடித்தந்துள்ளனர். இதனையிட்டு இப்பிராந்தியத்தைச்சேர்ந்த விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற வகையில் பெருமையடைகின்றேன். 2018ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர்கள் தங்கப் பதக்கங்களை பெறுவதற்கானஇலக்கினை வைத்து விளையாட்டுத்துறை அமைச்சி செயற்படுகின்றது. இதில் எமது வட, கிழக்கு மாகாணவீரர்களும் இலங்கை சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தங்களது முழுத் திறமைகளையும்வெளிக்காட்ட வேண்டும்.  வட கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு அகடமி நிறுவப்படவுள்ளது. இதற்கான ஏற்பாட்டுகளைவிளையாட்டுத்துறை அமைச்சும், சர்வதேச நிறுவனங்களும் மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம் வீரர்களுக்குதொடர்ச்சியான பயிற்;சிகளை வழங்குவதோடு சர்வதேசத்தில் புகழ் பூத்த வீரர்களை வரவழைத்து அவர்கள்மூலமான பயிற்சிகளையும் வழங்க முடியும். வன்னி மாவட்ட விளையாட்டுக் கழகங்களின் பிரச்சினைகளை கவனத்திலெடுத்து அக்கழகங்களைமேம்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதோடு இம்மாவட்டத்தின் விளையாட்டு மைதானங்களில்நிலவும் குறைபாடுகளை கண்டறிந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  விளையாட்டு உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடு சம்பந்தமாக அமைச்சர் தயாசிறியும், நானும்திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். இவ்விடயம் சம்பந்தமாக விரைவில்தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் இலங்கையின் நடுத்தர அடர்த்தி நார்பலகைக்கான இறக்குமதி வர்த்தக விலையினை நீக்கியுள்ளது !

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பில் இடம்பெற்ற இலங்கை-பாக்கிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு புதிய வர்த்தக சலுகையை ஏற்படுத்தி உள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தினையும்;...

”கூரையில் ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவர் வானத்தில் ஏறி வைகுண்டம் போனாராம்” !

    -அபூ மூஸா -  வெளிநாட்டிலிருந்து ஒரு இலட்சம் வீடுகளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நாடு திரும்பப் போவதாக முஸ்லீம் காங்கிரஸின் இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. வடக்கிற்கும், கிழக்கிற்கும் இந்த வீடுகளை அவர்...

1176 பயணிகளுடன் அம்பாந்தோட்டைக்கு வருகை தரவுள்ள மிகப்பெரிய பயணிகள் கப்பல் !

  நெதர்லாந்திற்கு சொந்தமான மிகப்பெரிய அதிசொகுசு பயணிகள் கப்பலான எம்.எஸ்.ரொட்டடம் எதிர்வரும் ஞாயிறன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத்தரவுள்ளது. 238 மீட்டர்கள் நீளங்கொண்ட இக்கப்பலில் 600 ற்கும் அதிகமான நிர்ருவாக குழுவினர்கள் உள்ளார்கள்.  இந்தியாவின் கொச்சின் துறைமுகத்திலிருந்து வருகை...

சென்னையில் முகாம் அமைக்க முயன்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம் முறியடிப்பு !

பெங்களூரில் கடந்த மாதம் சிக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகளில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சிரியா–ஈராக்கில் உருவான ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக...

யாழ்ப்பாணத்தில் இரு முஸ்லீம் பாடசாலைகளில் இதுவரை வருடாந்த விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்படவில்லை ?

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி, அல் ஹதீஜா மகளீர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இதுவரை வருடாந்த விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்படவில்லை . இதற்கு காரணம் வளப்பற்றக்குறை மற்றும் நிதிபற்றாக்குறை என பாடசாலை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. இவ்விரு...

Latest news

- Advertisement -spot_img